ECONOMY

எம்பிகேஎஸ் உலக மின்மினிப் பூச்சி தினத்தை ஏற்பாடு செய்கிறது

4 ஆகஸ்ட் 2022, 10:05 AM
எம்பிகேஎஸ் உலக மின்மினிப் பூச்சி தினத்தை ஏற்பாடு செய்கிறது
எம்பிகேஎஸ் உலக மின்மினிப் பூச்சி தினத்தை ஏற்பாடு செய்கிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 4: கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎஸ்) மற்றும் மலேசியாவின் வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் (FRIM) இணைந்து உலக மின்மினிப் பூச்சி தினத்தை கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயத்தில் இந்த சனிக்கிழமை நடத்தவுள்ளது

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மின்மினிப் பூச்சிகள் பற்றிய விளக்கவுரை, மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுடன் பூச்சி கண்காட்சி போன்ற பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.

உலக மின்மினிப் பூச்சி தினக் கொண்டாட்டம் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு இடங்களில் நடைபெறும் கோலா சிலாங்கூர் கார்னிவல் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும்.

மூன்று நாள் நிகழ்ச்சியில் 'ரிவர் க்ரூஸ்', இறால் விருந்து மற்றும் மீன்பிடி போட்டி உட்பட பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

மேலும், ஓவியம் மற்றும் சிற்பப் போட்டிகள், சமையல், வண்ணம் தீட்டுதல் மற்றும் கதைசொல்லல் போன்ற போட்டிகளும், பார்வையாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கல்களும் காத்திருக்கின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.