ECONOMY

தொழிலாளர்கள் நலன் காக்க எம்.டி.யு.சி.யுடன் அணுக்கமான ஒத்துழைப்பு தேவை

3 ஆகஸ்ட் 2022, 3:44 AM
தொழிலாளர்கள் நலன் காக்க எம்.டி.யு.சி.யுடன் அணுக்கமான ஒத்துழைப்பு தேவை

ஷா ஆலம், ஆக 3- மலேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் (எம்.டி.யு.சி.) சிலாங்கூர் அரசு அணுக்கமான நட்புறவைப் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து காக்கப்படுவதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியம் தேவைப்படுவதாக கோத்தா டாமன்சாரா தொகுதி உறுப்பினர் ஷாதிரி மன்சோர் கூறினார்.

அண்மையில் சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவு (யு.பி.பி.எஸ்.) எம்.டி.யு.சி. யுடன் சந்திப்பு நடத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மாநில அரசு தங்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை செலுத்துகிறது என்பதை உணர்த்துவதற்காக இத்தகைய சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாநிலத்தை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.