ECONOMY

மனிதவள பற்றாக்குறை சிலாங்கூரில் முதலீட்டு செயல்திறனை பாதிக்காது

27 ஜூலை 2022, 4:22 AM
மனிதவள பற்றாக்குறை சிலாங்கூரில் முதலீட்டு செயல்திறனை பாதிக்காது

ஷா ஆலம், ஜூலை 27: தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை சிலாங்கூரில் முதலீட்டு செயல்திறனை பாதிக்காது என்று வேலைவாய்ப்புக்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மலேசியாவில் நான்காவது அதிக முதலீட்டு மதிப்பை மாநில அரசு பதிவு செய்துள்ளதாக வி கணபதிராவ் கூறினார்.

"மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சிலாங்கூர் அதிக உற்பத்தித் திட்ட அனுமதிகளைப் பதிவு செய்துள்ளது, இது மலேசியாவில் முதலீட்டாளர்களுக்கு இன்னும் விருப்பமான இடமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

சிலாங்கூரில் முதலீட்டு செயல்திறனை பாதிக்கும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை குறித்து ரவாங் பிரதிநிதி சுவா வெய் கியாட்டின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும் முதலீட்டு செயல் திறனைத் தக்கவைக்க, இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

"மேலும், உற்பத்தி செயல்பாட்டில் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி, ஆட்டோமேஷன் அமைப்புகள் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொழிலையும் நாங்கள் உருவாக்குகிறோம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.