ECONOMY

கம்போங் துங்குவில் உள்ள 1,186 மூத்த குடிமக்கள் ஷாப்பிங் பற்றுச்சீட்டுகளை பெறலாம்

18 ஜூலை 2022, 5:01 AM
கம்போங் துங்குவில் உள்ள 1,186 மூத்த குடிமக்கள் ஷாப்பிங் பற்றுச்சீட்டுகளை பெறலாம்

ஷா ஆலம், ஜூலை 18: கம்போங் துங்கு சட்டமன்றம் மூத்த குடிமக்களுக்கான ஜோம் ஷாப்பிங் திட்டத்தில் (எஸ்எம்யுஇ) மொத்தம் 1,186 பங்கேற்பாளர்கள் இன்று முதல் பற்றுச்சீட்டுகளை பெறலாம்.

பெறுனர்கள் ஜூலை 20 வரை கம்போங் துங்கு சட்டமன்ற சமூக சேவை மையத்தில் (பிகேஎம்) அதை பெறலாம் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.

“மே முதல் ஆகஸ்ட் வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிகேஎம் இல் பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

“அவர்கள் கெலானா ஜெயா ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யலாம். மாநில அரசாங்கத்தின் திட்டத்தில், பெறுநர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஏதேனும் விசாரணைகள் அல்லது தகவலுக்கு, 03-7954 4724 என்ற எண்ணில் கம்போங் துங்கு சட்டமன்ற சமூக சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும். சிலாங்கூர் பட்ஜெட் 2022 இந்த ஆண்டு திட்டத்தின் தொடர்ச்சிக்காக மொத்தம் RM2.75 கோடி ஒதுக்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.