ECONOMY

சுகாதாரத் துறையை மையமாக வைத்து நாளை கோலா சிலாங்கூரில் மக்கள் உதவித் திட்டம்

1 ஜூலை 2022, 7:31 AM
சுகாதாரத் துறையை மையமாக வைத்து நாளை கோலா சிலாங்கூரில் மக்கள் உதவித் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 1: நாளை கோலா சிலாங்கூரில் உள்ள ஸ்டேடியம் உத்தாமாவில் நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் மக்களுக்கு பல முன் முயற்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யதுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது, மக்கள் பராமரிப்பு திட்டத்தில் (ஐபிஆர்) மறுகட்டமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார்.

இந்த நிகழ்வில், சுகாதாரமான சிலாங்கூர் அர்ப்பணிப்பு, சிலாங்கூர் ஆரோக்கியமான உதவி, இதய சிகிச்சைத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஆரோக்கியமான பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிலாங்கூர் சுகாதாரத் திட்டத்தை அமிருடின் தொடங்க உள்ளார்.

மேலும் நோட்டீஸ் 5A கையளிப்பு, சிலாங்கூர் உயர் செயல்திறன் கிராம சிறப்பு விருது மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட சிறந்த கிராமத்திற்கான விருது வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

நிகழ்ச்சியில் பிரபல கலைஞர் வான் ஹஸ்ரிதா மற்றும் Mr X குழுவின் நிகழ்ச்சிகள் மற்றும் ஏரோபிக்ஸ், சமையல் போட்டிகள், மலர் அலங்காரம் மக்கள் விளையாட்டு,  கண்காட்சிகள் மற்றும் விற்பனை ஆகியவையும் இடம்பெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.