ECONOMY

இந்த வார இறுதியில் கோலா சிலாங்கூர் உட்பட மூன்று இடங்களில் சுகாதார பரிசோதனை

29 ஜூன் 2022, 4:52 AM
இந்த வார இறுதியில் கோலா சிலாங்கூர் உட்பட மூன்று இடங்களில் சுகாதார பரிசோதனை

ஷா ஆலம், ஜூன் 29: ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் உட்பட மூன்று இடங்களில் இந்த வார இறுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச சுகாதாரப் பரிசோதனைகள் தொடரும்.

இம்முறை சிலாங்கூர் சாரிங் திட்டத்தில், கோலா சிலாங்கூர், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

வரும் சனிக்கிழமை புக்கிட் மெலாவத்தி மற்றும் ஜெராம் சட்டமன்றத்தில் உள்ள கோலா சிலாங்கூர் ஸ்டேடியம் உத்தாமாவில் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் உடன் இலவச சுகாதாரப் பரிசோதனை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, பாலாகோங் சட்டமன்றத்தில், பத்து 11 கூடைப்பந்து மைதானம் மற்றும் பந்திங் சட்டமன்றத்தில், டேவான் ஸ்ரீ ஜுக்ராவில் இத்திட்டம் நடைபெறும்.

சிலாங்கூர் சாரிங்கின் வெற்றிக்காக மாநில அரசு RM34 லட்சம் ஒதுக்கியுள்ளது, இது 39,000 குடும்ப மருத்துவம், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை வரலாறு கொண்ட குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.