ECONOMY

இந்த ஆகஸ்ட் மாதம் பெர்மாதாங் சட்டமன்றத்தின் டிஜிட்டல் திட்டத்தில் சேர உள்ளூர் தொழில் முனைவோர் அழைக்கப்படுகிறார்கள்

23 ஜூன் 2022, 7:58 AM
இந்த ஆகஸ்ட் மாதம் பெர்மாதாங் சட்டமன்றத்தின் டிஜிட்டல் திட்டத்தில் சேர உள்ளூர் தொழில் முனைவோர் அழைக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், ஜூன் 23: கோலா சிலாங்கூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தொழில் முனைவோர் அடுத்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்யப்படும் சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர் திட்டத்தில் (JUDS) பங்கேற்க அழைக்கப் படுகிறார்கள்.

இந்த திட்டம் தொடர்பாக சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்துடன் (சிடேக்) விவாதித்து வருவதாக பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“இந்த தொழில் முனைவோர் திட்டம் வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கும், சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாகும்.

“இந்த டிஜிட்டல் திட்டத்தில் 200 தொழில்முனைவோர் பங்கேற்க இலக்கு வைத்துள்ளோம். எனவே, இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள், ”என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த தொழில்முனைவோர் திட்டம் 2020 தில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது செப்டம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

சிடேக் ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம், தொழில் முனைவோர் சர்வதேச சந்தையில் எளிதாகவும் விரைவாகவும் ஊடுருவ உதவும் ஒரு முக்கியமான கருவியாகும்.

இந்த திட்டத்திற்கு ஒன்பது தோழமை இணைப்பு பிஜி மால், ஈஸிஸ்டோர், டிராபீ, லாசாடா, ஜே&தி, யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர், செல்டெக், எஸ்எஸ்எம் மற்றும் ஷோபீ ஆகியோரின் ஒத்துழைப்பையும் பெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.