ECONOMY

கிள்ளான் பள்ளத்தாக்கில் சிறப்புக் குழு அமைக்கப்படும் - குடிநுழைவுத் துறை

10 ஜூன் 2022, 9:31 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் சிறப்புக் குழு அமைக்கப்படும் - குடிநுழைவுத் துறை

புத்ராஜெயா, ஜூன் 10 - கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆன்லைன் கடப்பிதழ் விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களை செயலாக்க மற்றும் அங்கீகரிக்க பல மாநிலங்களில் இருந்து குடிநுழைவுத்துறை  அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை குடிநுழைவுத்துறை அமைக்கும்.

மலேசிய அனைத்துலக கடப்பிதழுக்கான விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களின் அதிகரிப்பின் காரணமாக நெரிசலை சமாளிக்க செயல்படுத்தப்பட்ட மேம்பாடுகளில் இந்த நடவடிக்கை இருப்பதாக குடி நுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவுட் கூறினார்.

சமீபத்தில் ஜோகூர் பாருவில் செயல்படுத்தப்பட்ட செயல்முறையை விரைவுபடுத்துவதில் நல்ல பலனை தந்ததாக அவர் கூறினார்.

"அதனால் அதே செயல்முறை கிள்ளான் பள்ளத்தாக்கிலும் பயன்படுத்தப்படும்," என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் சிறப்பு குழுவில் சேர பல மாநிலங்களில் இருந்து அதிகாரிகளை திரட்டும் பணியில் குடிநுழைவுத்துறை இருப்பதாக கைருல் டிசைமி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.