ECONOMY

புதிய மக்கள் நலத் திட்டம் ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது

3 ஜூன் 2022, 8:38 AM
புதிய மக்கள் நலத் திட்டம் ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 3: புதிய மக்களுக்கான நலன் திட்டங்களை ஊக்குவிக்கும் பரிவுமிக்க சிலாங்கூர் அர்ப்பணிப்பு திட்டம் (ஐ.எஸ்.பி) ஜூன் 11 ஆம் தேதி உலு லங்காட்டில் தொடங்க உள்ளது.

டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு, கோலா லங்காட், கோலா சிலாங்கூர், பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களிலும் ஜூலை மாதம் வரை நிகழ்ச்சி நடைபெறும்.

ஏரோபிக்ஸ், சமையல் போட்டிகள், மலர் தொடுத்தல், மக்கள் விளையாட்டு, ஸ்கேட்போர்டிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி நடக்கும்.

பெடுலி ரக்யாட் திட்டத்திற்குப் பதிலாக இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தைச் செயல்படுத்துவது, RM35 கோடி ஒதுக்கீட்டை உள்ளடக்கியது, இதனால் மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் பலன்களிலிருந்து அதிகமான குடியிருப்பாளர்கள் பயனடையலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.