ECONOMY

டிங்கில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.பி.ஐ. உதவி

30 மே 2022, 1:16 PM
டிங்கில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.பி.ஐ. உதவி

ஷா ஆலம், மே 30- டிங்கில், கம்போங் ஜெண்டராம் ஹிலிரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் உடமைகளை இழந்தவர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் உணவு பொருள்களையும் பானங்களும் வழங்கியது.

இது தவிர சிறார்கள் பயன்படுத்தக் கூடிய பெம்பர்ஸ் உள்ளிட்ட பொருள்களையும் தாங்கள் வழங்கியதாக எம்.பி.ஐ. சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக  தங்கியுள்ள அக்கிராமத்திலுள்ள மண்டபத்திற்கு இப்பொருள்களை அனுப்பினோம். அவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் வெகுவிரைவில் நிதியுதவியும் வழங்கவுள்ளோம் என்றார் அவர்.

நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒன்பது வாடகை வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் தங்குமிடத்தையும் உடமைகளையும் முற்றாக இழந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.