ECONOMY

சிலாங்கூரில் கோழி கையிருப்பு குறித்து விவாதிப்பதற்கான சிறப்பு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது

23 மே 2022, 9:16 AM
சிலாங்கூரில் கோழி கையிருப்பு குறித்து விவாதிப்பதற்கான சிறப்பு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது

ஷா ஆலம், 23 மே: சிலாங்கூரில் சப்ளையர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களைத் தொடர்பு கொண்டு விநியோக நிலையைச் சரி பார்க்குமாறு கால்நடை சேவைத் துறையை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்த.

கோழித் தீவன விலை ஒப்பீட்டளவில் அதிகமாக அதிகரித்துள்ளமையே சந்தையில் சிக்கன் வரத்து குறைவடையக் காரணமாக இருக்கலாம் என இஸாம் ஹாஷிம் தெரிவித்தார்.

“கோழித் தீவனத்தின் விலை உயர்வு, பண்டிகைக் காலம், நோய்ப் பிரச்சினை எனப் பல காரணிகள் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன.

“இருப்பினும், இதுவரை எனக்கு கோழி நோய் பற்றிய எந்த அறிக்கையும் வரவில்லை. எனவே, கோழி இறைச்சி இன்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) மாநாட்டு மையத்தில் கோத்தா அங்கேரிக் மாநில சட்டமன்ற ஹரி ராயா திறந்த இல்லத்தில் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (ஃபாமா) மற்றும் சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) நடத்திய ஆய்வின் அடிப்படையில், கோழி விநியோகம் இல்லாத பிரச்சனை ஒரு சில இடங்களில் மட்டுமே கண்டறியப்பட்டது என்று இஸாம் கூறினார்.

இருப்பினும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில், இந்த பிரச்னையை முழுமையாக ஆய்வு செய்ய, இன்னும் சிறப்பு கூட்டங்களை நடத்துகிறோம், என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.