ECONOMY

கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் மாவட்டங்களில் இன்று நோன்புப் பெருநாள் உபசரிப்பு

20 மே 2022, 6:54 AM
கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் மாவட்டங்களில் இன்று நோன்புப் பெருநாள் உபசரிப்பு

ஷா ஆலம், மே 20- கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களில் இன்று நடைபெறும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளும்படி வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கோல சிலாங்கூர் பண்டார் மெலாவத்தி பஸ் முனைய வளாகத்தில் இன்று மாலை 3.00 மணிக்கும் சுங்கை பெசார் ஸ்டேடியம் வளாகத்தில் மாலை 4.00 மணிக்கும் இந்த உபசரிப்பு நடைபெறும்.

இந்நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறார்களுக்கு பண அன்பளிப்புகளை வழங்குவர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக தடைபட்டிருந்த இந்த பொது உபசரிப்பு நிகழ்வு இவ்வாண்டு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.