ECONOMY

மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

19 மே 2022, 6:23 AM
மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

ஷா ஆலம், மே 19- இம்மாதம் 18 ஆம் தேதி வரை மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் நடைபெற்ற மாநில நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் சமுதாயத்தின் பல்வேறு நிலையிலான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த மே 15 ஆம் தேதி உலு சிலாங்கூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் நடைபெற்ற பொது உபசரிப்பு நிகழ்வில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

மறுநாள் கோம்பாக், தாமான் மெலாவத்தி ரமலான் சந்தை வளாகத்தில் நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்வுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்திருந்தனர்.

கடந்த 17 ஆம் தேதி உலு லங்காட் மாவட்ட நிலையிலான பொது உபசரிப்பு பண்டார் பாரு பாங்கி லாமான் நியாகா கம்யூனிட்டியில் நடைபெற்ற வேளையில் நேற்று புதன் கிழமை பண்டார் பாரு சாலாக் திங்கி, பி.பி.எஸ்.டி, வாக் வளாகத்தில் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வுகள் அனைத்திலும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கும் பண அன்பளிப்புகளை வழங்கினர்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வு வரும் மே 21 ஆம் தேதி வரை மாநிலத்தின் அனைத்து 9 மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.