ECONOMY

தற்காலிக உரிமங்கள் வழங்குதல் ஆண்டு இறுதி வரை தொடரும் – எம்பிஎஸ்ஜே

14 மே 2022, 11:00 AM
தற்காலிக உரிமங்கள் வழங்குதல் ஆண்டு இறுதி வரை தொடரும் – எம்பிஎஸ்ஜே

சுபாங் ஜெயா, மே 14: சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) இந்த ஆண்டு இறுதி வரை வியாபாரிகளுக்கு தற்காலிக வணிக உரிமங்களை வழங்கும்.

டத்தோ பண்டார் ஜோஹாரி அனுவார் கூறுகையில், இந்த முயற்சியானது, எண்டமிக் கட்டத்தில் வருமானத்தை மீண்டும் உருவாக்க வணிகர்களுக்கு உதவும் என்றார்.

“உள்ளூர் வியாபாரிகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உரிமங்களை வழங்குவதற்கான வசதிகளை நாங்கள் வழங்குவோம். இதனால் அவர்கள் வணிகம் செய்ய அனுமதிக்கப்படும் பகுதிகளை நாங்கள் தீர்மானிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

எம்பிஎஸ்ஜே தலைமையகத்தில் நேற்று நடந்த ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோஹாரி, ஊராட்சி மன்ற நிர்வாகப் பகுதியில் உள்ள உள்ளூர் வர்த்தகர்களின் பொருளாதாரம் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிப்ரவரி 21 அன்று உள்ளாட்சி அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், மாநில அரசு உரிமம் பெறாத வணிகர்கள் மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட குழுவிற்கு 10,000 க்கும் மேற்பட்ட தற்காலிக உரிமங்களை வழங்குவதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சிறு வணிகர்களுக்கான தற்காலிக உரிமக் காலம் இந்த ஜூன் மாதம் வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.