ECONOMY

சிலாங்கூரில் 73,938 மாணவர்கள் இன்று எஸ்.பி.எம். தேர்வை எழுதுகின்றனர்

2 மார்ச் 2022, 6:05 AM
சிலாங்கூரில் 73,938 மாணவர்கள் இன்று எஸ்.பி.எம். தேர்வை எழுதுகின்றனர்

ஷா ஆலம், மார்ச் 2- சிலாங்கூரில் இன்று 73,938 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதுகின்றனர்.  தனியார் மாணவர்களும் தேர்வு எழுதுவோரில் அடங்குவர்.

எனினும், மொத்தம் மாணவர்களில் 73,719 மாணவர்கள் மட்டுமே இன்று தேர்வை எழுதுகின்றனர். எஞ்சிய 219 மாணவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்று மாநிலக் கல்வித் துறையின் கற்றல் பிரிவு துணை இயக்குநர் டத்தின் நோர் பரிடா ஏ பாக்கார் கூறினார்.

மாநில முழுவதும் 508 தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மாணவர்கள் அனைவரும் நிதானத்துடனும் கவனத்துடனும் தேர்வை எழுதுவர் என எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 7 தேசிய இடைநிலைப்பள்ளியில்  மாணவர்கள் தேர்வு எழுதுவதைப் பார்வையிட்ட பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இப்பள்ளியைச் சேர்ந்த 381 மாணவர்கள் இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.