ECONOMY

மார்ச் 1 ல் பணிக்கு  8,000  ஆசிரியர்கள் பணியிடங்களை சரி பார்க்க வேண்டும்.

16 பிப்ரவரி 2022, 3:58 AM
மார்ச் 1 ல் பணிக்கு  8,000  ஆசிரியர்கள் பணியிடங்களை சரி பார்க்க வேண்டும்.

கோலாலம்பூர்,பிப் 16: ஆசிரியர் பணிக்கான  சிறப்பு முறை நேர்காணல்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நேர்காணல்களில் வெற்றி பெற்ற 8,120 புதிய ஆசிரியர்கள் நேற்று முதல் தங்கள் பணியிடங்களை மதிப்பாய்வு செய்யலாம்.

மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின், அனைத்து ஆசிரியர்களும் மார்ச் 1-ம் தேதி அந்தந்த பள்ளிகளில் பணியை தொடங்குவார்கள் என்றார்.

"வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறந்த தேசிய வாரிசுகளின் தலைமுறையை உருவாக்குவதற்கு உண்மையாக உழைக்க ஆசிரியராகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக நீடித்து வரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மொத்தம், 18,702 பேரை உள்ளடக்கிய, 'ஒரே முறை' என்ற அடிப்படையில், சிறப்பு ஆசிரியர் பணி நியமனம் என்றார்.என்றார்.

கல்வி அமைச்சு (கே.பி.எம்) கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் (எஸ்.பி.பி) நியமன ஆணையம் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்றும், எதிர்காலத்தில் மீதமுள்ள 'ஒரே முறை' ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான நியமனம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைவு படுத்தும் ராட்ஸி கூறினார்.

ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, குறிப்பாக அடுத்த பள்ளி அமர்வுக்கு இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று அவர் விளக்கினார்.

நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாகத் தீர்க்க கே.பி.எம் பாடுபடும். நாட்டின் அடுத்த தலைமுறையின் கல்விக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,என்றார்.

-பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.