ECONOMY

கோவிட்-19க்கு 41.6 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

19 ஜனவரி 2022, 7:20 AM
கோவிட்-19க்கு 41.6 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 19- நாட்டில் நேற்று 127,066 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனுடன் சேர்த்து ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 44 ஆயிரத்து 147 பேராக அல்லது 41.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதனிடையே இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 192 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 2 கோடியே 31 லட்சத்து 88 ஆயிரத்து 245 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

இதுதவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 74 ஆயிரத்து 961 பேர் அல்லது 88.2 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் 28 லட்சத்து 61 ஆயிரத்து 715 பேர் அல்லது 91 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

நேற்று நாட்டில் 129,597 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 1,043 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,488 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர். 

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது.

 இதற்கிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்டைய 9 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.