ECONOMY

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,381 ஆகப் பதிவு

8 ஜனவரி 2022, 5:53 AM
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,381 ஆகப் பதிவு

கோலாலம்பூர், ஜன 8- நாட்டில் நேற்று 3,381 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களிளில் 98.9 விழுக்காட்டினர் அல்லது 3,344 பேர் லேசான நோய்த் தாக்கம் கொண்ட அல்லது நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எஞ்சிய 1.1 விழுக்காட்டினர் அல்லது 37 பேர்  மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 319 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர். அவர்களில் 284 பேர் வெளிநாட்டினர். 35 பேர் மலேசிய பிரஜைகள் என்று அவர் சொன்னார்.

நேற்று நோய்த் தொற்றிலிருந்து 3,447 பேர் குணமடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை  மூவாயிரத்திற்கும் கீழ் பதிவான கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதன் பின்னர் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது.

நேற்று நாட்டில் மொத்தம் ஆறு புதிய நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன-

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.