HEALTH

கோவிட் -19 நோயிலிருந்து  9,000 பேர்  குணமடைந்தனர்

24 அக்டோபர் 2021, 9:01 AM
கோவிட் -19 நோயிலிருந்து  9,000 பேர்  குணமடைந்தனர்

கோலாலாம்பூர், அக் 24- நாட்டில்  நேற்று  5,828 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால்  பாதிக்கப்பட்ட  வேளையில்  9,178 பேர் அந்நோயிலிருந்து குணமடைந்தனர்.

நேற்று  நோய்த்  தொற்றுக்கு  ஆளானவர்களில் 5,731 பேர் அல்லது  98.3 விழுக்காட்டினர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.

நேற்று பதிவான மொத்த சம்பவங்களில் 97 அல்லது 1.7 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை கொண்டுள்ளன என்று சுகாதாரத்  துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

தீவிர சிகிச்சைப்  பிரிவில்  620 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 297 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி  தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சபா மற்றும் ஜோகூர் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட இரு  தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.