ஷா ஆலம், செப் 25- சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவுக்கு 10,000 கோவிட்-19 பாதுகாப்பு உபகரணங்களை இக்லாஸ் அறவாரியம் மலேசிய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து வழங்கியுள்ளது.பதினெட்டு மாதங்களாக கோவிட்-19 நோய்த் தொற்றுடன் போராடிக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றும் வகையில் 4,000 முகக் கவரிகள், 2,000 பாதுகாப்பு கவசங்கள் 296,800 வெள்ளி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறவாரியத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜைனுர் ரஷிட் ஜைனுடின் கூறினார்.
சுகாதார அமைச்சின் பணியாளர்கள் எதிர் நோக்கும் சிரமங்களை பகிர்ந்து கொள்வதில் மேம்பாட்டு வங்கியுடன் நாங்கள் கொண்டிருக்கும் விவேக ஒப்பந்தம் ஓரளவு துணை புரியும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலம் தவிர்த்து, சபா, சரவா, நெகிரி செம்பிலான் மாநிலங்களின் சுகாதார இலாகாக்களுக்கும் இத்தகைய உதவி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனை மற்றும் சி.ஏ.சி. எனப்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் பணி புரியும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த உபகரணங்கள் பெரிதும் துணை புரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ECONOMY
சிலாங்கூர் சுகாதார இலாகாவுக்கு 10,000 கோவிட்-19 பாதுகாப்பு சாதனங்கள் அன்பளிப்பு
25 செப்டெம்பர் 2021, 9:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

selangor
சுக்மா போட்டிகளுக்கான நிதி குறைப்பு, விளையாட்டு வீரர்களின் பயிற்சியைப் பாதிக்கவில்லை
Shalini Rajamogun
7 மே 2026

உங்கள் கருத்து என்ன?




