ECONOMY

கோவிட்-19 : நாட்டில் இன்று 14,990 நேர்வுகள் பதிவு- சிலாங்கூரில் 2,414 பேர் பாதிப்பு

22 செப்டெம்பர் 2021, 1:23 PM
கோவிட்-19 : நாட்டில் இன்று 14,990 நேர்வுகள் பதிவு- சிலாங்கூரில் 2,414 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 22- நாடு முழுவதும் இன்று கோவிட்-19 சம்பவங்கள் எண்ணிக்கை சற்று குறைந்து 14,990 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சிலாங்கூரில் புதிதாக நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்றை விட அதிகரித்து 2,414 ஆக ஆகியுள்ளதாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட பதிவில்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் ஜொகூர் உள்ளதாக கூறிய அவர், அம்மாநிலத்தில் 1,880 சம்பவங்களும் சரவாவில் 1,712 சம்பவங்களும் கிளந்தானில 1,573 சம்பவங்களும் பேராக்கில் 1,490 சம்பவங்களும் பதிவானதாக கூறினார்.

நாட்டின் இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- பினாங்கு (1,224), சபா (1,199), கெடா (1,007), திரங்கானு (852), பகாங்(685), கோலாலம்பூர் (338), மலாக்கா (313), நெகிரி செம்பிலான் (170), பெர்லிஸ் (97), புத்ரா ஜெயா (30), லபுவான் (3).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.