ECONOMY

நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

17 செப்டெம்பர் 2021, 8:33 AM
நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 17- நாட்டு மக்கள் தொகையில் 5

76.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர்  இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 17லட்சத்து 83 ஆயிரத்து 871 பேர் அல்லது 92.7 விழுக்காட்டினர் குறைந்தது  ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர். ஒரு முறை மட்டுமே செல்லுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசியை பெற்றவர்களும் இதில் அடங்குவர்.

கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் இவ்விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

நேற்று நாடு முழுவதும் 202,298  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.