நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்கோலாலம்பூர், செப் 17- நாட்டு மக்கள் தொகையில் 5
76.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
மேலும், 2 கோடியே 17லட்சத்து 83 ஆயிரத்து 871 பேர் அல்லது 92.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர். ஒரு முறை மட்டுமே செல்லுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசியை பெற்றவர்களும் இதில் அடங்குவர்.
கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் இவ்விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
நேற்று நாடு முழுவதும் 202,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது
ECONOMY
நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
17 செப்டெம்பர் 2021, 8:33 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



