நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்கோலாலம்பூர், செப் 17- நாட்டு மக்கள் தொகையில் 5
76.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
மேலும், 2 கோடியே 17லட்சத்து 83 ஆயிரத்து 871 பேர் அல்லது 92.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர். ஒரு முறை மட்டுமே செல்லுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசியை பெற்றவர்களும் இதில் அடங்குவர்.
கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் இவ்விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
நேற்று நாடு முழுவதும் 202,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது
ECONOMY
நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
17 செப்டெம்பர் 2021, 8:33 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

national
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

national
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
Shalini Rajamogun
13 பிப்ரவரி 2026

video
PM: Pelaburan Kerajaan Madani mesti beri pulangan kepada rakyat
Kathiravan Manoharan
24 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




