ECONOMY

கோம்பாக் செத்தியா தொகுதியில் 2,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

16 செப்டெம்பர் 2021, 4:47 AM
கோம்பாக் செத்தியா தொகுதியில் 2,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

கோம்பாக், செப் 16- இதுவரை கோவிட்-19  நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோம்பாக் செத்தியா தொகுதி சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசி, மாவு, சார்டின், பால், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் ரொக்கத் தொகையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாக கோம்பாக் செத்தியா தொகுதி சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஹிம் காஸ்டி கூறினார்.

பெருந்தொற்று பாதிப்பினால் மக்கள் உணவுப் பற்றாக்குறைப் பிரச்னையை எதிர்நோக்காமலிருப்பதை உறுதி செய்ய தொடர்ந்தாற்போல் இந்த உணவுப் பொருள் விநியோம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்து கேவ்ஸ். டேவான் ராக்யாட் திறந்த வெளி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரச்னைகளை எதிர்நோக்கும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் பணியை தீவிரமாக மேற்கொள்ளும்படி அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடந்த மாதம் 28 ஆம் தேதி வலியுறுத்திருந்தா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.