HEALTH

போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்- பத்து பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை

15 செப்டெம்பர் 2021, 5:44 AM
போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்- பத்து பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை

ஷா ஆலம், செப் 15- கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை போலியாக தயாரித்தது  தொடர்பில் இதுவரை 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக  உள்துறை துணைமையச்சர் 1 டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமது கூறினார்.

இக்குற்றம் தொடர்பில் கிளந்தான் மற்றும் மலாக்காவில் தலா இருவரும் சரவா மாநிலத்தில் நால்வரும் பேராக்கில் ஒருவரும் சபாவில் இருவரும் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர் சரவா மாநிலத்தைச் சேர்ந்தவராவார். அவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது என்று மக்களவையில் அவர் சொன்னார்.

போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை தயாரித்தது தொடர்பில் எத்தனை பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்று செத்தியு தொகுதி பாஸ் கட்சி உறுப்பினர  ஷஹாரிசுக்ரிமான அப்துல் காடீர் எழுப்பிய துணைக் கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.