ECONOMY

நாட்டில் 1.7 கோடி தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்

14 செப்டெம்பர் 2021, 10:45 AM
நாட்டில் 1.7 கோடி தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்

கோலாலம்பூர், செப் 14-நாட்டு மக்கள் தொகையில் 53.5 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 766 பேர்  இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 348 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு https://Covidnow.Moh.gov.my  எனும் அகப்பக்கம் வாயிலாக வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 227,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப் பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று இரவு 11.59 மணி வரை கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பலியானார்கள் எண்ணிக்கை 104 ஆக பதிவாகியுள்ளது. இது தவிர 304 பழைய மரணச் சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.