ECONOMY

நாட்டில் நேற்று வரை 32.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

16 ஆகஸ்ட் 2021, 10:25 AM
நாட்டில் நேற்று வரை 32.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஆக 16- நாட்டில் நேற்று வரை மொத்த மக்கள் தொகையில் 32.9 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 7 லட்சத்து 34 ஆயிரத்து 415 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 76 ஆயிரத்து 440 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 78 லட்சத்து 10 ஆயிரத்து 855 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

விகிதாசார அடிப்படையில் 72.9 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 45.9 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.