HEALTH

ஆதரவை மீட்டது அம்னோ- பெரிக்கத்தான் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது

3 ஆகஸ்ட் 2021, 2:11 PM
ஆதரவை மீட்டது அம்னோ- பெரிக்கத்தான் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது

கோலாலம்பூர், ஆக 3- அரசாங்கத்திற்கும் அரண்மனைக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டது.

அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக  அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிட் கூறினார்.

மாமன்னருக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கும் விதமாக பெரிக்கத்தான் அரசாங்கத்திற்கும் பிரதமர் என்ற முறையில் மொகிடினுக்கும் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வது என்று அம்னோ உச்சமன்றம் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற முறையில் மொகிடினுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்ளும் போதுமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மாமன்னரிடம் ஒப்டைக்கப்பட்டு விட்டது. இதன் வழி அவரது அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.