HEALTH

குறையாத கோவிட்-19  பெருந்தொற்று- இன்று 12,528 சம்பவங்கள் பதிவு

17 ஜூலை 2021, 10:56 AM
குறையாத கோவிட்-19  பெருந்தொற்று- இன்று 12,528 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 17- நாட்டில் இன்று 12,528 கோவிட்-19 பெருந்தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்றைவிட 13 சம்பவங்கள் இன்று குறைவாக இருந்தாலும் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த எண்ணிக்கை குறைவு அமையவில்லை.

சிலாங்கூரில் நேற்று 5,512 ஆக இருந்த கோவிட்-19 நேர்வுகளின் எண்ணிக்கை இன்று சுமார் 500 குறைந்து 4,985 ஆக பதிவாகியுள்ளது.  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கோலாலம்பூர்  மற்றும் நெகிரி செம்பிலானில் முறையே 1,740 மற்றும் 1,280 ஆக கோவிட் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-

கெடா (701), சபா (647), ஜொகூர் (625), மலாக்கா (569), பேராக் (428), பினாங்கு (396), சரவா (388), பகாங் (317), கிளந்தான் (211), திரங்கானு (177), லபுவான் (22), புத்ரா ஜெயா (41) பெர்லிஸ் (1).

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.