HEALTH

எஸ்.ஒ.பி. விதி மீறில்- அமைச்சர் அனுவார் மூசாவுக்கு  வெ.2,000 அபராதம்

12 ஜூலை 2021, 2:54 PM
எஸ்.ஒ.பி. விதி மீறில்- அமைச்சர் அனுவார் மூசாவுக்கு  வெ.2,000 அபராதம்

கோலாலம்பூர், ஜூலை 12- முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் வீட்டிற்கு சென்றதன் வழி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான (பி.கே.பி.டி.) எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ அனுவார் மூசாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அவருக்கு இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைனால் அப்துல்லா கூறினார்.

2021 ஆம் ஆண்டு (தேசிய மீட்சித் திட்டத்தின்) தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளின் 17வது பிரிவின் கீழ் அனுவார் மூசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, போலீஸ் துறையிடமிருந்து குற்றப்பதிவு கிடைத்துள்ளதாகவும் அதற்கான அபராதத் தொகை விரைவில் செலுத்தப்படும் என்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.