ECONOMY

மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அடுத்த வாரம்  சனிக்கிழமை தொடங்கும்

13 ஜூன் 2021, 11:40 AM
மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அடுத்த வாரம்  சனிக்கிழமை தொடங்கும்

ஷா ஆலம், ஜூன் 13- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அடுத்த வாரம் சனிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட இடங்களை மையமாக கொண்டு இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தை நான்கு நாட்களுக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், சில இடங்களில் ஏக காலத்தில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை  நடத்தப்படும் என்றார்.

எனினும், மாநில அரசின் ஒப்புதலை பொறுத்து இத்திட்டம் அமல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எங்கள் திட்டத்தின் படி முதல் நாளன்று சுங்கை துவா, கோம்பா செத்தியா மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் எனறு அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதால் இம்முறை நடைபெறும் கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களில் அதிகமானோர் பங்கு கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.