ECONOMY

முழு அளவிலான பொது முடக்கம் சரியான தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்- அன்வார் வலியுறுத்து

29 மே 2021, 6:58 AM
முழு அளவிலான பொது முடக்கம் சரியான தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்- அன்வார் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மே 29- நாட்டில் அமல்படுத்தப்படும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை சரியான மற்றும் விரைவான தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நோய்த் தொற்று பரவும் இடங்களை துல்லியமாக அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அதன் தொடர்பான தரவுகளை திரட்டும் அதிகாரம் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட தொற்று மையங்களை அடிப்படையாக கொண்டு முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது ஆக்ககரமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொற்று பரவும் இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான அனுமதியை அரசாங்கம், அரசு சாரா அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள், அனைத்துலக அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்றார் அவர்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

முன்னதாக அவர், சன்வே பிரமிட் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு வருகை புரிந்து அதன் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

எதிர்க்கட்சி கூட்டணியும் சுயமாக அமைக்கப்பட்ட குழுவின் மூலம் கோவிட்-19 பற்றிய தரவுகளை சேகரித்து 2021 அவசரகால சுயேச்சைக் குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் அன்வார்  குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.