HEALTH

கோவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிப்பு- இன்று 7,857 நேர்வுகள் பதிவு

27 மே 2021, 10:14 AM
கோவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிப்பு- இன்று 7,857 நேர்வுகள் பதிவு

ஷா ஆலம், மே 27- நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்று அதிகப்பட்சமாக 7,857 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து ஏழாயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோன்பு பெருநாளுக்குப் பிந்தைய வாரத்தில் அதாவது கடந்த 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஆறாயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்துள்ளதை தரவுகள் காட்டுவதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்தாண்டு நாட்டில்  இந்நோய்த் தொற்று பரவியது முதல் இதுவரை 541,224 பேர்  பாதிப்படைந்துள்ளதாக அவர் சொன்னார்.

மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதித்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

சிலாங்கூர் (2,675), சபா (217), ஜொகூர் (549), கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசயம் (561), சரவா (772), பினாங்கு (365), கிளந்தான் (754), நெகிரி செம்பிலான் (353), பேராக் (228), கெடா (441), மலாக்கா (234). பகாங் (328), திரங்கானு (282), லபுவான் (170), புத்ரா ஜெயா (12), பெர்லிஸ் (6).

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.