ECONOMY

தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 பரிசோதனைக்கு கட்டண வரம்பை நிர்ணியிப்பீர்- அரசுக்கு வேண்டுகோள்

22 மே 2021, 3:56 AM
தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 பரிசோதனைக்கு கட்டண வரம்பை நிர்ணியிப்பீர்- அரசுக்கு வேண்டுகோள்

ரவாங், மே 22- தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 பரிசோதனைக்கு கட்டண வரம்பை நிர்ணயிக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வசதி குறைந்தவர்களும் இந்த சேவையை பெறுவதற்கு இந்நடவடிக்கை வழி வகுக்கும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

ஆண்டிஜென் (ஆர்.டிகே-ஏஜி) மற்றும் பெலிமெர்ஸ் (ஆர்.டி.-பிசிஆர்) உபகரணங்கள் வழி கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதற்கு தற்போது விதிக்கப்படும் கட்டணம் மக்களுக்கு சுமையை அளிக்கும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று அண்மைய காலமாக அதிகரித்து வரும் காரணத்தால் கோவிட்-19 நோய்த் தொற்று பரிசோதனை என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

ஆர்.டி.கே.-ஏஜி உபகரணம் வழி மேற்கொள்ளப்படும் சோதனைக்கு தனியார் கிளினிக்குகள் 100 வெள்ளி வரை கட்டணம் விதிக்கின்றன. ஆனால், அதற்கான உண்மையான செலவினம் மிகவும் குறைவானதாகும் என்றார் அவர்.

பொதுமக்கள் சுயமாக முன்வந்து கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இதற்கான கட்டணத்தை 60 வெள்ளி முதல் 70 வெள்ளி வரை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும். இதன் வழி அதிகமானோர் சொந்த செலவில் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு  ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.