ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 6,806 ஆக அதிகரிப்பு- சிலாங்கூரில் 2,277 சம்பவங்கள் பதிவு

20 மே 2021, 8:35 AM
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 6,806 ஆக அதிகரிப்பு- சிலாங்கூரில் 2,277 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், மே 20- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று 6,806 பேர் அந்நோயினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் 2,277 பேர் அந்நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அதற்கு அடுத்து கோலாலம்பூரில் 655 சம்பவங்களும்  ஜோகூரில் 615 சம்பவங்களும்  சரவா மாநிலத்தில் 608 சம்பவங்களும் கிளந்தானில் 426 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.

நாட்டில் நேற்று 6,075 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 2,251 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியவை ஆகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.