ஷா ஆலம், மே 20- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் கோம்பாக் செத்தியா, டேவான் பெரிங்கினில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 2,027 பேர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடங்கியது முதல் பதிவான அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 8 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருக்க க்கூடும் என கணிக்கப்படுகிறது. எந்த அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையும் அடையாளம் காண்பதற்கு இந்த இயக்கம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, மாநில அரசின் அரசின் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோம்பாக் செத்தியா மற்றும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இந்த இலவச கோவிட-19 பரிசோதனை இயக்கத்தை மந்திரி புசார் முன்னதாக நேரில் சென்று பார்வையிட்டார்.








