கோலாலம்பூர், மே 17- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பெறுவதற்கான முன்பதிவு நடவடிக்கை அனைத்து மலேசியர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்று கோவிட-19 தடுப்பூசி விநியோக உத்தரவாதக் குழு கூறியது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் https://www.vaksincovid.gov.my/en/register அகப்பக்கம் தேசிய கோவிட்-19 தடுப்புசித் திட்டத்திற்கான பதிவே தவிர அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பெறுவது தொடர்பானது அல்ல என்று அது தெளிவுபடுத்தியது.
ஆகவே, பொதுமக்கள் பொய்யான தகவல்கள் விஷயத்தில் மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு கோவிட்-19 தடுப்பூசி உத்தரவாதக் குழுவின் அதிகாரத்துவ சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்களைப் பெறும்படியும் அது கேட்டுக் கொண்டது.








