ECONOMY

புதிய கோவிட்-19 எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சி- இன்று 3,780 சம்பவங்கள் பதிவு

16 மே 2021, 1:34 PM
புதிய கோவிட்-19 எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சி- இன்று 3,780 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், மே 16- கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று சற்று வீழ்ச்சியடைந்து 3,780 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4,140ஆக இருந்தது.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470,110 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை  இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மொத்தம் 1,275 கோவிட்- 19 சம்பவங்களுடன் சிலாங்கூர் முதலிடத்திலும் 405 சம்பவங்களுடன் சரவா மற்றும் 363 சம்பவங்களுடன் கெடா ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையிலும் உள்ளதாக அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கிளந்தான் (357), கோலாலம்பூர் (342), ஜொகூர் (224), பினாங்கு (187), பகாங் (159), மலாக்கா (122), பேராக் (115), சபா (87), நெகிரி செம்பிலான் (70), திரங்கானு (58), புத்ரா ஜெயா மற்றும் லபுவான் (தலா 7) மற்றும் பெர்லிஸ் (2) ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.