ECONOMY

நாட்டில் புதிய கோவிட் -19 தொற்றுகள் 4,855 சம்பவங்களாக அதிகரித்துள்ளன,

13 மே 2021, 12:12 PM
நாட்டில் புதிய கோவிட் -19 தொற்றுகள் 4,855 சம்பவங்களாக அதிகரித்துள்ளன,

கோலாலம்பூர், மே 13 - கடந்த 24 மணி நேரமாக நாட்டில் புதிய கோவிட் -19 தொற்றுகள் 4,855 சம்பவங்களாக அதிகரித்துள்ளன, இது நேற்று 4,765 தொற்றுகளாக இருந்தது.

சுகாதார இயக்குநர் ஜெனரல், டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில், இந்த காலகட்டத்தில் சிலாங்கூர் தினமும் அதிக எண்ணிக்கையிலான தினசரி தொற்றுகளை 1,783 பதிவு செய்துள்ளதாகவும்  தொடர்ந்து கோலாலம்பூர் (521) மற்றும் ஜொகூர் (467) ஆகியவையும் உள்ளன  என தெரிவித்துள்ளார்.

சரவாக் மற்றும் பினாங்கு தலா 395 தொற்றுகளை பதிவு செய்தன; கிளந்தான் (339); பேராக் (302); கெடா (193); திராங்கானு (148); நெகிரி செம்பிலான் (100); சபா (76); மலாக்கா (67); பஹாங் (56); புத்ராஜெயா (ஒன்பது); லாபுவன் (நான்கு), பெர்லிஸில் தொற்றுகள் எதுவும் பதிவிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்..

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.