ECONOMY

நோன்புப் பெருநாளின் போது சரக்கு வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த அனுமதி

11 மே 2021, 12:57 PM
நோன்புப் பெருநாளின் போது சரக்கு வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த அனுமதி

புத்ரா ஜெயா, மே 11- நோன்புப் பெருநாள் காலத்தில் சரக்கு வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 12ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நாடு தழுவிய நிலையல் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதை கருத்தில் கொண்டு பெருநாள் காலத்தில் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நோன்பு பெருநாளின் போது சரக்கு வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு கடந்த காலங்களில் தடை விதித்து வந்தது.

பெருநாளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டது.

சாலைகளைப் பயன்படுத்துவோர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆக க்கடைசி தகவல்களை அறிந்து கொள்ளும் அதேவேளையில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் பின்பற்றி நடக்கும்படி அமைச்சு கேட்டுக் கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.