ECONOMY

இலவச நீர் விநியோகத் திட்டத்தில் பங்கேற்பீர்- ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வேண்டுகோள்

17 ஏப்ரல் 2021, 7:10 AM
இலவச நீர் விநியோகத் திட்டத்தில் பங்கேற்பீர்- ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வேண்டுகோள்

ஷா ஆலம், ஏப் 17- ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான் எனப்படும்  இலவச நீர் விநியோகத் திட்டத்தில் பங்கு கொள்ள விண்ணப்பிக்கும்படி  பொதுமக்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தகுதி உள்ளவர்களுக்கு 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்கும் அத்திட்டத்தில் பங்கேற்பதற்கு பொது மக்களுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியது.

மலேசிய பிரஜைகளாகவும் சிலாங்கூரில் வசிப்பவர்களாகவும் மாதாந்திர குடும்ப வருமானம் மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவாக உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான நிபந்தனைகளாகும் என அது தெரிவித்தது.

குடியிருப்புகள் தனி மீட்டரை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு பயனீட்டாளர் ஒரு கணக்கிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அந்நிறுவனம்  அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

தகுதி உள்ளவர்கள்  https://ssipr-daftar.selangor.gov.my/register   எனும் அகப்பக்கம் வாயிலாக இந்த இலவச நீர் விநியோகத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோர்  மட்டும் பயன்பெறும் வகையில்  இந்த இலவச நீர் விநியோகத் திட்டம் மறுசசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.