ECONOMY

பிப்ரவரி முதல் இலவச கோவிட்-19 பரிசோதனையில் 7,000 பேர் பங்கேற்பு

20 மார்ச் 2021, 10:05 AM
பிப்ரவரி முதல் இலவச கோவிட்-19 பரிசோதனையில் 7,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம் மார்ச் 20- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நேற்று வரை சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சுமார் 7,000 பேர் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டவர்களில் 32 பராமரிப்பு மையங்களைச் சேர்ந்த 894 மூத்த குடிமக்களும் அடங்குவர் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையக இத்தகைய பரிசோதனை இயக்கங்களில் தொடர்ந்து கலந்து தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கிவிட்டதால் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது அவசியமற்றது என பொதுமக்கள் கருதக்கூடும். எனினும், அந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் இத்தகைய சோதனையை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

இன்று, தெலுக் பங்ளிமா காராங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைத் கட்டுப்படுத்துவதற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் சுமார் 60 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த இலவச கோவிட்-19 சோதனை இயக்கத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.