ECONOMY

ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை சலுகை சிறப்பு குழந்தைகளுக்கு

17 பிப்ரவரி 2021, 4:02 AM
ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை சலுகை சிறப்பு குழந்தைகளுக்கு

ஷா ஆலம், 17 பிப்ரவரி: பெற்றோர்கள் 18 வயதிற்கு உட்பட்ட குறைபாடுகள் ( மன, மற்றும் உடல் ஊணமுற்ற குழந்தைகளை கொண்டிருந்தால், அவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். சிறப்பு குழந்தைகள் சிலாங்கூர் (அனிஸ்)  உதவித்திட்டம்,  திங்கள் கிழமை திறக்கப்பட்டது.

இந்த உதவி ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை சலுகைகளை வழங்குவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கான சிறப்பாக’’ ஒவ்வொரு குடும்பமும் நான்கு வகையான உதவிகளைப் பெறலாம், அதாவது உணவு மற்றும் கூடுதல் தேவைகள், இயந்திர உபகரணங்கள் வாங்குவது அல்லது சரிசெய்தல், மருத்துவம் மற்றும் சிறப்புக் கல்வி. OKU அதிகாரமளித்தல் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு சிலாங்கூர் பட்ஜெட்டில் 2021 இல் RM3.25 மில்லியனை ஒதுக்கியுள்ளது. Www.anis.yawas.my இல் இப்போது பதிவு செய்யுங்கள், ”என்று டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக்கில் வழி தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்து சரிபார்க்கலாம், அதே நேரத்தில் விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரும் உதவி தொடர்ந்து வழங்கப்படும்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.