ஷா ஆலம், ஜன 22- நோய்த் தொற்று பிரச்சினைகளை முறையாக கண்காணிப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படுத் தொடங்கும்.இந்த நடவடிக்கை அறை மாநில அரசு தலைமை செயலகத்தில் உள்ள ஸ்மார்ட் சிலாங்கூர் சி5ஐ நடவடிக்கை மையத்திலிருந்து செயல்படும்
உதவித் திட்டங்களை ஒருமுகப்படுத்துவது, மத்திய அரசு நிறுவனங்களுடன்
இணைந்து கட்டுப்பாட்டு பணிகளுக்கு உதவுவது மற்றும் மாநிலத்தில் நோய்த்
தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை கண்காணிப்பது ஆகிய பணிகளை
இந்த நடவடிக்கை அறை மேற்கொள்ளும் என்று எஸ்.எஸ்.டி.யு. எனப்படும்
ஸ்மார்ட் சிலாங்கூர் விநியோகப் பிரிவு கூறியது.
சுமார் 60 லட்சம் வெள்ளி செலவிலான இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அதிவேக இணைய ஒருங்கமைப்பை கொண்டிருக்கும்.
மேலும், ஓரிட தொடர்பு முறை, தரவு மையம், தரவு ஆய்வு ஆற்றல் வசதிகளைக் கொண்ட புள்ளிவிபரத் தளம் ஆகிய வசதிகளையும் இந்த கட்டுப்பாட்டு மையம் கொண்டிருக்கும்.
உத்தரவு, கட்டுப்பாட்டு, தொடர்பு, கணினி, கூட்டுச் செயல்பாடு, ஒத்துழைப்பு
ஆகிய ஐந்து அம்சங்களை இந்த நடவடிக்கை அறையின் பணிகள்
உள்ளடக்கியிருக்கும்.
ECONOMY
சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படத் தொடங்கும்
22 ஜனவரி 2021, 5:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் காத்திருப்பு நேரக் குறைப்பு: விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
Shalini Rajamogun
4 ஜூலை 2026

national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



