ஷா ஆலம், ஜன 22- நோய்த் தொற்று பிரச்சினைகளை முறையாக கண்காணிப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படுத் தொடங்கும்.இந்த நடவடிக்கை அறை மாநில அரசு தலைமை செயலகத்தில் உள்ள ஸ்மார்ட் சிலாங்கூர் சி5ஐ நடவடிக்கை மையத்திலிருந்து செயல்படும்
உதவித் திட்டங்களை ஒருமுகப்படுத்துவது, மத்திய அரசு நிறுவனங்களுடன்
இணைந்து கட்டுப்பாட்டு பணிகளுக்கு உதவுவது மற்றும் மாநிலத்தில் நோய்த்
தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை கண்காணிப்பது ஆகிய பணிகளை
இந்த நடவடிக்கை அறை மேற்கொள்ளும் என்று எஸ்.எஸ்.டி.யு. எனப்படும்
ஸ்மார்ட் சிலாங்கூர் விநியோகப் பிரிவு கூறியது.
சுமார் 60 லட்சம் வெள்ளி செலவிலான இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அதிவேக இணைய ஒருங்கமைப்பை கொண்டிருக்கும்.
மேலும், ஓரிட தொடர்பு முறை, தரவு மையம், தரவு ஆய்வு ஆற்றல் வசதிகளைக் கொண்ட புள்ளிவிபரத் தளம் ஆகிய வசதிகளையும் இந்த கட்டுப்பாட்டு மையம் கொண்டிருக்கும்.
உத்தரவு, கட்டுப்பாட்டு, தொடர்பு, கணினி, கூட்டுச் செயல்பாடு, ஒத்துழைப்பு
ஆகிய ஐந்து அம்சங்களை இந்த நடவடிக்கை அறையின் பணிகள்
உள்ளடக்கியிருக்கும்.
ECONOMY
சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படத் தொடங்கும்
22 ஜனவரி 2021, 5:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
18 மே 2026

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




