ECONOMY

டோப் கிளோவ் நிறுவனத்தின் ஏழு தொழிற்சாலைகளை இரு வாரங்களுக்கு மூட உத்தரவு

25 நவம்பர் 2020, 8:32 AM
டோப் கிளோவ் நிறுவனத்தின் ஏழு தொழிற்சாலைகளை இரு வாரங்களுக்கு மூட உத்தரவு

ஷா ஆலம் நவ 25-, கிள்ளான், ஜாலான் தெராத்தாயில் உள்ள டோப் கிளோவ்

நிறுவனத்தின் ஏழு தொழிற்சாலைகளை இரு வாரங்களுக்கு மூட உத்தரவு

பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டு தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் 342வது பிரிவின் கீழ்

அந்த தொழிற்சாலைகளை மூடும் உத்தரவை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா

பிறப்பித்தது.

அத்தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை

மிக அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்

படுகிறது என்று கிள்ளான் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சித்தா முகமது கூறினார்.

முதல் கட்டமாக இந்த ஏழு தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இதர தொழிற்

சாலைகள் அடுத்த நான்கு கட்டங்களில் படிப்படியாக மூடப்படும் என்றார் அவர்.

இந்த இரு வார கால அவகாசத்தில் அத்தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஊழியர்களுக்கு கோவிட்-19

நோய்த் தொற்று சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு கிருமி நாசினி தெளிக்கும்

பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.