ECONOMY

2020 அக்டோபர் வரை சிலாங்கூர் அரசின் வருமானம் 199 கோடி வெள்ளி

31 அக்டோபர் 2020, 6:24 AM
2020 அக்டோபர் வரை சிலாங்கூர் அரசின் வருமானம் 199 கோடி வெள்ளி

ஷா ஆலம், அக் 31- இவ்வாண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வரை சிலாங்கூர் அரசு வருமானமாக 199 கோடி வெள்ளியை ஈட்டியுள்ளது. இவ்வாண்டில் 220 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டிருந்த நிலையில்  அதில் 90.46 விழுக்காட்டுத் தொகையை மாநில அரசு இதுவரை பெற்றுள்ளது.

வரி வசூலிப்பின் மூலம் 58 கோடியே 35 லட்சத்து 10ஆயிரம் வெள்ளியும் வரி அல்லாத வருமானம் மூலம் 177 கோடி வெள்ளியும் இதர வகை வருமானம் மூலம் 23 கோடியே 69 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியும் பெறப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டில் 232 கோடியே ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 535 வெள்ளி 51 காசு வருமானத்தை  மாநில அரசு ஈட்டியது.

அந்த தொகையில் 70 கோடியே 7 லட்சத்து 10ஆயிரம் வெள்ளி வரி வசூலிப்பின்  மூலமாகவும் 133 கோடியே 84 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியும் இதர வருமானங்களின் வழி 28 கோடியே 10 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியும் பெறப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.