ECONOMY

நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை

30 அக்டோபர் 2020, 4:23 PM
நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை

ஷா ஆலம், அக் 30- சிலாங்கூரில் சுத்திகரிக்கப்படாத நீர் மாசுபடும் சம்பவங்களை தடுக்க சிலாங்கூர் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

சுங்கை லங்காட் மற்றும் சுங்கை சிலாங்கூரில் அடிக்கடி நிகழும் நீர் மாசுபடும் சம்பவங்களால் நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்படுவதை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீஅமிருடின் ஷாரி கூறினார்.

ஆறுகளின் அருகில் உள்ள வீடுகள் மற்றும் சட்டவிரோத தொழிற்சாலைகளை அகற்றுவதற்கு ஏதுவாக கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஆறுகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளும் தொழிற்சாலைகளும் ஆற்று நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.