ECONOMY

தீபகற்ப மலாயாவில் இரயில் பயணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு

27 அக்டோபர் 2020, 4:21 PM
தீபகற்ப மலாயாவில் இரயில் பயணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு

கோலாலம்பூர் அக் 27 ;- இன்று முதல் எதிர் வரும் நவம்பர் மாதம் 9ந் தேதி வரைக்குமான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலிலுள்ள காலத்தில் இரயில் போக்குவரத்து பயணிகளுக்கான கட்டணம் 50 விழுக்காடாகக் குறைக்கப்படுவதாக மலாயா இரயில்வே கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி இஞ்ஞினியர் டத்தோ கமருல் ஜாமான் சைனால் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்றினால்  இரயில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டாலும், அட்டவணையிடப் பட்ட பட்டியல் படி எல்லா ஊர்களுக்கும் தும்பாட்டிலிருந்து கிம்மாஸ் மற்றும் ஜோகூர்பாரு - கோலாலம்பூர், பாடாங் பெசார் - கோலாலம்பூர் மற்றும் ஈப்போ மற்றும் பட்டர்வெர்த் இடையிலான எல்லா இரயில் சேவைகளும், மின்சார இரயில் போக்குவரத்தும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.

இந்தப் பயணங்களுக்குப் பயண அனுமதிகளை (டிக்கெட்களை) நிகழ்நிலை சேவைகளின் வழி (ஓன் லைனில்) வழி பெறலாம் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.