ECONOMY

எம்ஏஎச்பி: பயணிகளின் எண்ணிக்கை 6.3% உயரந்து 10.6 மில்லியன் ஆனது

10 ஜூன் 2017, 12:49 AM
எம்ஏஎச்பி: பயணிகளின் எண்ணிக்கை 6.3% உயரந்து 10.6 மில்லியன் ஆனது

கோலா லம்பூர் ஜூன் 10:

மலேசியா விமான நிலைய நிறுவனமான மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) அறிக்கையின் படி மே 2017 வரை பயணிகள் எண்ணிக்கை 10.6 மில்லியன் ஆக உயர்வு கண்டது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 6.3% உயரந்து காணப்பட்டது என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளது.

மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மேலும் கூறுகையில் அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை 4.8 மில்லியன் அதாவது 12.6% உயரந்து காணப்பட்டது என்றும் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 1.5% உயரந்து  5.8 மில்லியன் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், விமான நிலைய நிறுவனமான எம்ஏஎச்பி 7.1% வளர்ச்சி கண்டு 122.9 மில்லியன் பயணிகள் பதிவு செய்த வேளையில், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையம்  (கெஎல்ஐஏ) பயணிகள் எண்ணிக்கை 12.7% உயர்வு கண்ட வேளையில் கெஎல்ஐஏ2 11.6% வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

எம்ஏஎச்பி தனது அறிக்கையில் மே மாதம் 2017-இல் மட்டும் 7.9 மில்லியன் பயணிகளை பதிவு செய்த வேளையில் இது கடந்த ஆண்டை விட 8.5% உயரந்து காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: பெர்னாமா செய்தி

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.