ஷா ஆலாம், செப்.2 : நேற்று கம்போங் புக்கிட் காப்பார் பகுதியில் வீசிய கடுமையான புயலில் 32 வீடுகள் சேதமடைந்தன.
காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை (BBP), நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
எனினும், இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றும், உயிரிழப்பு அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.







