பெக்கான் நானாஸில் புயல் - 100 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்

4 மே 2026, 3:23 AM
பெக்கான் நானாஸில் புயல் - 100 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்

பொந்தியான், மே 4 – பெக்கான் நானாஸ், கம்போங் மலாயு ராயாவில் புயல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர், நேற்று மாலை 6 மணிக்கு திறக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட பலத்த காற்றினால் 29 கட்டிடங்களின் கூரைகள் மற்றும் உட்கூரைகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்.கே. மலாயு ராயா தேசியப் பள்ளியில் இந்த நிவாரண மையம் திறக்கப்பட்டதாக பொந்தியான் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.

"இந்த சம்பவத்தில் 23 வாடகை வீடுகள், ஐந்து சொந்த வீடுகள் மற்றும் ஒரு மதரஸா குடியிருப்பு ஆகியவற்றின்
கூரைகள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அந்த செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்துடன் ஆரம்பக்கட்ட உதவி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு மலேசிய பாதுகாப்புப் படையின் இரண்டு அவசர ஊர்திகள் மற்றும் அரச மலேசிய காவல்துறையின் ஒரு ரோந்து வாகனமும் ஆதரவளித்தன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.